இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 16ம் திகதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.
அதனடிப்படையில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 473 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தனது முதலாவது இனிங்ஸை முடிவுக் கொண்டுவந்திருந்தது.அதிகபட்சமாக லாபஸ்சேன்-103, டேவிட் வோர்னர்-95, ஸ்மித்-93 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.
பந்துவீச்சில் பென்ஸ் ஸ்டோக் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
தொடர்ந்து தனது 1-வது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 236 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்ககளையும் இழந்தது.
அதிகபட்சமாக டேவிட் மாலன்-80, ஜோ ரூட்-62 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.
பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார்ஸ்-4, நாதன் லியான்-3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து தனது 2வது இனிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது அவுஸ்திரேலியா.
இதையடுத்து 468 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 192 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்திருந்தது.
இதனால் அவுஸ்திரேலிய அணி 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2:0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து